அன்புத்தோழமைகளுக்கு,
தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள்.
தமிழ்க்குடில் அறக்கட்டளை அன்னையர் தினத்தை முன்னிட்டு நடத்திய கட்டுரைப்போட்டியில் பரிசுபெற்றவர்களுக்கு அறக்கட்டளை அறிவித்திருந்தபடி பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வெற்றிபெற்ற அனைவருக்கும் மீண்டும் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். :)
முதல் பரிசு - காசோலை மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ்
கட்டுரைப்போட்டி முதல் பரிசு முனைவர் ஜ. பிரேமலதா - ரூ.1500/-
இரண்டாம் பரிசு திருமதி. வசந்தா இராமன், தமிழ்க்குடில் வழங்கும் பரிசு மற்றும் சான்றிதழ்
மூன்றாம் பரிசு நர்கீஸ் ஜியாவுதீன்
இனிவரும் போட்டிகளிலும் பெருமளவில் பங்குகொண்டு சிறப்பிக்கும்படியும், தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தொடர்ந்த செயல்பாடுகளில் தங்கள் கரம்கோர்த்து பயணிக்க வேண்டுகிறோம்.
என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில் அறக்கட்டளை