May 23, 2015

தமிழ்க்குடில் அறக்கட்டளை 4ஆம் ஆண்டு துவக்கம்.


தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்புவணக்கம்.  __/\__ :) :)

நம் தமிழ்க்குடில் அறக்கட்டளை துவங்கப்பட்டு (21.05.15) மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து  22.05.2015 அன்று நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.  தங்களின் தொடர்ந்த ஒத்துழைப்பிற்கும், இடைவிடாத ஊக்கத்திற்கும், பங்களிப்பிற்கும் மனமார்ந்த நன்றியினை நெகிழ்வுடன் நவில்கின்றோம். தமிழ்க்குடிலின் செயல்பாடுகள் தொடர்ந்திடவும், சிறப்பாக செயலாற்றிடவும் வெற்றிப்படிகளாக அமைந்துவருவது தாங்கள் எங்களுக்கு அளித்துவரும் நம்பிக்கையும் தங்களின் பங்களிப்பும் என்பதில் ஐயமில்லை.  தாயின் கரம்பிடித்து செல்லும் குழந்தையாய் தமிழ்க்குடில் தங்கள் கரங்கள் பற்றிச்செல்கிறது.  குன்றாத தாயன்பாய் தாங்கள் நம் தமிழ்க்குடில் மீது தொடர்ந்து காட்டிவரும் அன்பிற்கு மகிழ்ச்சியும் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.  தமிழ்க்குடிலின் மலர்த்தோட்டத்தில் பூத்திருக்கும் மலர்கள் தொடர்ந்து மணம்வீசி மனம் மகிழ்ந்திட வாழ்த்துகள்.  :) :) 

என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில் அறக்கட்டளை.

May 15, 2015

அன்னையர் தின கட்டுரைப்போட்டி - தமிழ்க்குடில் அறக்கட்டளை


அன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்க்குடில் கவிதை, கட்டுரைப் போட்டிகளை நடத்திவருவது தாங்கள் அறிந்ததே.


2015 ஆம் ஆண்டிற்கான போட்டிகளில் முதல் கட்டமாக ”அன்னையர் தினத்தை” முன்னிட்டு பெண்களுக்கான கட்டுரை போட்டிகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

போட்டி: அன்னையர் தினம் - பெண்களுக்கு மட்டும். smile emoticon


தலைப்பு : அன்னையை முன்னிறுத்தி உங்களுக்கு விருப்பமான தலைப்பில் எழுதவும். தங்கள் சிந்தனைகள் குறிப்பிட்ட ஒரு தலைப்பில் சுறுங்(க்)கி விடாமலிருக்க தலைப்பினை தேர்வு செய்வதை தங்களிடமே வழங்கியிருக்கிறோம். smile emoticon


விதிமுறை: குறைந்தது 3 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.

படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 10.06.15 .

படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும். குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.

படைப்புகள் வேர்டு ஆவணமாக அனுப்பவேண்டுகிறோம். லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து அனுப்பவேண்டுகிறோம். கவிதை எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.

போட்டி சம்பந்தமாக எழும் சந்தேகங்களை பதிவில் மட்டும் கேட்கும்படி வேண்டுகிறோம்.

முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.

முதல் பரிசு: ரூ.1500/- மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்

இரண்டாவது பரிசு: தமிழ்க்குடில் வழங்கும் சிறப்புப்பரிசு மற்றும் சான்றிதழ்

மூன்றாவது பரிசு: நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்.

இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.

நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக.
அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.


குறிப்பு. : இந்தப்பதிவை காணும் நண்பர்கள் தங்கள் நட்புகளிடத்தும் பகிர்ந்து அதிக எண்ணிக்கையிலான எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தவேண்டுகிறோம். போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம் எனவே தங்கள் நட்பு, சுற்றம் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்.